செய்திகள்
ரேஷன் கடை ஊழியரை தகாத வார்த்தையால் திட்டிய வாலிபர் கைது
வெள்ளோடு அருகே ரேஷன் கடை ஊழியரை தகாத வார்த்தையால் திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). ரேஷன் கடை ஊழியர். இவர் ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன்நகர் பகுதியை சேர்ந்த கவுதம்ராஜ் (25) என்பவர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனால் சரவணன் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கவுதம்ராஜை கைது செய்தனர்.
வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). ரேஷன் கடை ஊழியர். இவர் ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன்நகர் பகுதியை சேர்ந்த கவுதம்ராஜ் (25) என்பவர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனால் சரவணன் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கவுதம்ராஜை கைது செய்தனர்.