செய்திகள்
கோப்பு படம்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 5 பேர் அனுமதி

Published On 2020-05-18 14:23 IST   |   Update On 2020-05-18 14:23:00 IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் 4 பெண்கள் உள்பட 6 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களை அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாளிடம் கேட்ட போது, ஈரோடு மாவட்டத்தில் தற்போது சளி, இருமல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அவர்களை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவர்களுக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபோல் தற்போது 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

Similar News