செய்திகள்
கோப்புப்படம்

குறிஞ்சிப்பாடி அருகே டேங்க் ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2020-05-16 08:48 GMT   |   Update On 2020-05-16 08:48 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே டேங்க் ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடி மண்டக மேட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவர் அந்த பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக உள்ளார்.

சம்பவத்தன்று மின்மோட்டாரை இயக்க பாலமுருகன் சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News