செய்திகள்
வெயில்

அக்னி நட்சத்திரம் தொடக்கம்- புதுவை மக்கள் விரக்தி

Published On 2020-05-04 16:47 IST   |   Update On 2020-05-04 16:47:00 IST
கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. பணிக்காக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடுத்தமாதம் ஜூனில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.

வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் மற்ற நாட்களை விட கடுமையான வெப்பம் இருக்கும். தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு 35 நாட்களுக்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. புதுவை மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முடங்கிக்கிடந்த காலத்திலும் வெப்பம் அதிகளவில் இருந்தது.

தற்போது பணிக்காக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பது மக்களிடம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News