செய்திகள்
மின் நிறுத்தம்

வேல்ராம்பட்டு பகுதியில் 5-ந்தேதி மின் நிறுத்தம்

Published On 2020-05-03 09:22 GMT   |   Update On 2020-05-03 09:22 GMT
வேல்ராம்பட்டு பகுதியில் 5-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எல்லைப்பிள்ளைசாவடி பகுதி, டி.ஆர். நகர், வேல் முருகன் நகர், திருமால் நகர் பகுதி, பீட்டர் நகர், மோகன் நகர் பகுதி, தந்தை பெரியார் நகர், சாரதாம்பாள் நகர், 

வெண்ணிலா நகர், பாக்கமுடையான்பட்டு பகுதி, சத்தியா நகர், அனந்தரங்கபிள்ளை நகர், ஞானபிப்பிரகாசம் நகர், சக்தி நகர் பகுதி மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஆனந்தா நகர், திருமகள் நகர், வேல்ராம்பட்டு, துளுக்கானத்தம்மன் நகர், ரமணர் வீதி, அண்ணா வீதி, அரவிந்தர் நகர், சுதானா நகர் முழுவதும். அங்காளம்மன் நகர், முருங்கப்பாக்கம் பேட், கமலம் நகர், அன்னை தெரசா நகர், ஒட்டம்பாளையம், டீச்சர்ஸ் காலனி, பாப்பான் சாவடி, குப்பம்பேட், கொம்பாக்கம் மற்றும் கொம்பாக்கம் பேட் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News