செய்திகள்
மாயம்

முத்தியால்பேட்டையில் பியூட்டிபாலர் பெண் ஊழியர் மாயம் கணவர் போலீசில் புகார்

Published On 2020-05-02 14:24 GMT   |   Update On 2020-05-02 14:24 GMT
முத்தியால்பேட்டையில் பியூட்டிபாலர் பெண் ஊழியர் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் தென்றல் வீதியை சேர்ந்தவர் பாபு (வயது37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா(27). இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுளா புதுவையில் உள்ள ஒரு பியூட்டி பாலரில் வேலை செய்து வந்தார். அவ்வப்போது மணப்பெண் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மஞ்சுளா வெளியூர் செல்வது வழக்கம். மேலும் வேலை இல்லாத நாட்களில் மஞ்சுளா தனது தாயுடன் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் பெண் அலங்கார வேலை விஷயமாக சம்பவத்தன்று வெளியூர் செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் மஞ்சுளா எங்கும் இல்லை. 

இதையடுத்து பாபு தனது மனைவி மாயமானது குறித்து சோலைநகர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மஞ்சுளாவை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News