செய்திகள்
மல்லாடி கிருஷ்ணாராவ்

என் வாழ்க்கை திறந்த புத்தகம்- மல்லாடிக்கு கவர்னர் பதிலடி

Published On 2020-05-02 11:26 GMT   |   Update On 2020-05-02 11:26 GMT
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்க தேவையில்லை. என் வாழ்க்கை திறந்த புத்தகம் அதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ், கவர்னர் கிரண்பேடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் விரக்தியின் வெளிப்பாடாக அவ்வாறு பேசுகிறார். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

எனவே, அவரது தவறான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்க தேவையில்லை. என் வாழ்க்கை புத்தகத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News