செய்திகள்
கொரோனா வைரஸ் பாதுகாப்பு

கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத சிவகங்கை மாவட்டம்

Published On 2020-04-27 07:21 GMT   |   Update On 2020-04-27 07:21 GMT
சிவகங்கை மாவட்டம் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.
காரைக்குடி:

கொரோனா தொற்று பரவலை தடுக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணியையும் முடுக்கி விட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் எளிதில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளது. தள்ளுவண்டிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று காய்கறி வழங்கப்படுகிறது.

அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் சமூக கட்டுப்பாடு காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த 20-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் இன்று வரை அதாவது 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நட வடிக்கைகளையும் மேற் கொண்டு வருகிறது.

இதற்கிடையே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள். பூரண குணமடைந்த அவர்களை கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் டாக்டர்கள் வழியனுப்பி வைக்கிறார்கள்.

Tags:    

Similar News