செய்திகள்
தேவகோட்டை பகுதியில் அகதிகள் முகாமில் 55 குடும்பங்களுக்கு இலவச அரிசி
தேவகோட்டை அகதிகள் முகாமில் குடும்ப அட்டை இல்லாத 55 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
தேவகோட்டை:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே தேவகோட்டை சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தேவகோட்டை அகதிகள் முகாமில் குடும்ப அட்டை இல்லாத 55 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் சிலம்பனி வீதியில் உள்ள 25 குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சாலை ஓரங்களில் வசிப்பவர்ளுக்கு சங்க நிர்வாகிகள் பாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு டீ, பிஸ்கட், முகக் கவசங்களை சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.
நிகழ்ச்சிகளில் தாசில்தார் மேசியாதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பாக சேவை செய்த நிர்வாகிகள் அனைவரையும் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பாராட்டினார்.
தலைவர் அறிவழகன், உடனடிமுன்னாள் தலைவர் கப்பலூர் பாஸ்கரன், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சுப்பிரமணி, துணை தலைவர்கள் வேலுச்சாமி, நடராஜன், யோகலட்சுமி, இணை செயலாளர் சரவணன் சேவை திட்ட இயக்குனர் சிவசுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே தேவகோட்டை சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தேவகோட்டை அகதிகள் முகாமில் குடும்ப அட்டை இல்லாத 55 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் சிலம்பனி வீதியில் உள்ள 25 குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சாலை ஓரங்களில் வசிப்பவர்ளுக்கு சங்க நிர்வாகிகள் பாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு டீ, பிஸ்கட், முகக் கவசங்களை சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.
நிகழ்ச்சிகளில் தாசில்தார் மேசியாதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பாக சேவை செய்த நிர்வாகிகள் அனைவரையும் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பாராட்டினார்.
தலைவர் அறிவழகன், உடனடிமுன்னாள் தலைவர் கப்பலூர் பாஸ்கரன், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சுப்பிரமணி, துணை தலைவர்கள் வேலுச்சாமி, நடராஜன், யோகலட்சுமி, இணை செயலாளர் சரவணன் சேவை திட்ட இயக்குனர் சிவசுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.