செய்திகள்
கோப்பு படம்

கைதிக்கு கொடுக்க செல்போன்-கஞ்சா கடத்தி சென்ற வாலிபர்கள் கைது

Published On 2020-04-25 14:25 IST   |   Update On 2020-04-25 14:25:00 IST
காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிக்கு கொடுக்க செல்போன்-கஞ்சா கடத்தி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:

கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று காலாப்பட்டை அடுத்த கீழ்புத்துப்பட்டு- ஒழிந்தியாபட்டு சாலையில் ரோந்து பணி சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறியதால் அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களின் சட்டை பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் அரியூரை சேர்ந்த சரண் என்ற சரண்ராஜ்(வயது28) மற்றும் மதிமோகன் (25) என்பதும், இவர்கள் காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சகடப்பட்டை சேர்ந்த கைதி சிவராமன் என்பவருக்கு கஞ்சா மற்றும் செல்போனை கொடுப்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Similar News