செய்திகள்
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை பிரிவு
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை பிரிவை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் கண்டறிய இதுவரை கொரோனா அறிகுறிகளோடு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நபர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரைக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாஸ்கரன் இந்த பரிசோதனை பிரிவை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் டாக்டர் மீனா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ரெத்தினவேல் கூறியதாவது:-
இதுவரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று உள்ளதா என்பதை அறிய கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் ஏற்படும் கால தாமதத்தை குறைக்க தற்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கான பரிசோதனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இனி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இங்கேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் கண்டறிய இதுவரை கொரோனா அறிகுறிகளோடு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நபர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரைக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாஸ்கரன் இந்த பரிசோதனை பிரிவை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் டாக்டர் மீனா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ரெத்தினவேல் கூறியதாவது:-
இதுவரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று உள்ளதா என்பதை அறிய கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் ஏற்படும் கால தாமதத்தை குறைக்க தற்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கான பரிசோதனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இனி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இங்கேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.