செய்திகள்
முகக்கவசம் விற்பனை செய்யும் நபர்

ஈரோட்டில் சைக்கிளில் வீதி, வீதியாக முகக்கவசம் விற்பனை செய்யும் நபர்

Published On 2020-04-18 20:31 IST   |   Update On 2020-04-18 20:31:00 IST
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் ஒருவர் சைக்கிளில் வீதிவீதியாக சென்று முகக்கவசம் விற்பனை செய்து வருகிறார்.
ஈரோடு:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் முகக்கவசம் கிடைக்காமல் பலர் சிரமப்பட்டு வருகிறார்கள். மார்க்கெட், கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் ஈரோட்டில் ஒருவர் சைக்கிளில் வீதிவீதியாக சென்று முகக்கவசம் விற்பனை செய்து வருகிறார். அவர் முக்கிய இடங்களுக்கு சென்று முகக்கவசம் விற்பனை செய்தார். அவரிடம் பொதுமக்கள் பலர் முகக்கவசங்களை வாங்கினார்கள்.

Similar News