செய்திகள்
நிதின்‌ஷர்மா

கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி இளைஞர் சிக்கினார்

Published On 2020-04-14 19:46 IST   |   Update On 2020-04-14 19:46:00 IST
கொரோனா பாதிப்புடன் தப்பி ஓடிய டெல்லி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு:

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் புதுச்சேரி வந்த டெல்லியை சேர்ந்த இளைஞர் நிதின்ஷர்மா விழுப்புரத்தில் தங்கியிருந்தார். 

இந்நிலையில், கொரோனா அறிகுறி இருந்ததால், அங்குள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பபட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

அத்துடன், அவரிடம் இருந்து ரத்த மாதிரி பெறப்பட்ட நிலையில், கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர். பின்னர், ஆய்வு முடிவில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 

3 தனிப்படை அமைத்து போலீசார் புதுச்சேரி, விழுப்புரத்தில் தீவிரமாக அந்த இளைஞரை தேடி வந்தனர். செங்கல்பட்டு அருகே உள்ள படாலம் பகுதியில் போலீசார் அவரை கைது செய்தனர். 

Similar News