செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கடைகள் மூடப்படும் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகள் இன்று முதல் அடைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 28 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் பரவல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை மூலம் தனித்தனி குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்வதாக புகார்கள் வந்துள்ளதால், மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) முதல் மூடப்படும்.
அந்த பகுதி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பழம், காய்கறிகள் அடங்கிய பை ஒன்று ரூ.100 வீதம் வாகனங்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று வினியோகம் செய்யப்படும். மளிகை சாமான் மற்றும் மருந்து, மாத்திரைகளும் தேவைப்படும் வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஒவ்வொரு முறையும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இந்த பகுதிக்கு உள்ளே செல்லும்போதும், வெளியே வரும் போதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வசித்த வீடுகளில் தினம் 5 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
பால் வினியோகம் செய்யும் வெளி நபர்கள் எவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் செல்லாத வண்ணம் அப்பகுதி தன்னார்வலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 28 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் பரவல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை மூலம் தனித்தனி குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்வதாக புகார்கள் வந்துள்ளதால், மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) முதல் மூடப்படும்.
அந்த பகுதி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பழம், காய்கறிகள் அடங்கிய பை ஒன்று ரூ.100 வீதம் வாகனங்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று வினியோகம் செய்யப்படும். மளிகை சாமான் மற்றும் மருந்து, மாத்திரைகளும் தேவைப்படும் வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஒவ்வொரு முறையும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இந்த பகுதிக்கு உள்ளே செல்லும்போதும், வெளியே வரும் போதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வசித்த வீடுகளில் தினம் 5 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
பால் வினியோகம் செய்யும் வெளி நபர்கள் எவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் செல்லாத வண்ணம் அப்பகுதி தன்னார்வலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.