செய்திகள்
கைது

சிறுவர்களுக்கு போதை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

Published On 2020-04-09 14:34 GMT   |   Update On 2020-04-09 14:34 GMT
சிறுவர்களுக்கு போதை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் ரோந்து பணி சென்றனர்.

அப்போது அங்குள்ள ஒரு பூட்டி கிடந்த பெட்டி கடை அருகே 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு நின்று கண்காணித்தனர்.

அப்போது பெட்டிக்கடையில் இருந்து 2 பேர் தடை செய்யப்பட்ட போதை பொருளை சிறுவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெட்டிக்கடை உரிமையாளர் அருள் (வயது45) மற்றும் அவரது நண்பர் தர்மன் (42) என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 164 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் விற்பனை பணம் 1425 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி சென்ற சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News