செய்திகள்
புதுவை கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
புதுவை மத்திய பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் அனைத்து பாடத்தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மார்ச் 23-ந்தேதி உத்தரவின் படியும், கடந்த மார்ச் 26-ந்தேதி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் படியும் அனைத்து பாடத்தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை அணுகலாம். அடுத்த கட்ட அறிவிப்பு தற்போதைய இக்கட்டான சூழ்நிலை முடிவுக்கு வந்ததும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மார்ச் 23-ந்தேதி உத்தரவின் படியும், கடந்த மார்ச் 26-ந்தேதி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் படியும் அனைத்து பாடத்தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை அணுகலாம். அடுத்த கட்ட அறிவிப்பு தற்போதைய இக்கட்டான சூழ்நிலை முடிவுக்கு வந்ததும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.