செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கொரோனா நிவாரணமாக இலவச அரிசி - கவர்னர் கிரண்பேடி உறுதி

Published On 2020-04-06 12:57 GMT   |   Update On 2020-04-06 12:57 GMT
வறுமைக் கோட்டுக்கு கீழ் வரும் புதுவை மக்களுக்கு கொரோனா நிவாரணமாக இலவச அரிசி வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு நிவாரணங்களை வழங்கி வருகிறது. இதனடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு இலவச அரிசியை வழங்குகிறது.

கொரோனா நிவாரணமாக ஏழைகளுக்கு வழங்க புதுவைக்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அரிசி இந்திய உணவு கழகத்தில் கையிருப்பில் தற்போது உள்ளது.

இதன்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வரும் புதுவை மக்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான கோப்பில் கவர்னர் கிரண்பேடி கோப்பு அரிசிக்கு பதிலாக பணமாக வங்கி கணக்கில் சேர்க்க கூறியதாக தெரிகிறது.

மேலும் இதுவரை அந்த கோப்பிற்கு அனுமதியும் வழங்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருதாவது:-

கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில் பாதிக்கப்பட்ட புதுவை மக்களுக்கான அரிசியை தடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது இது தவறானது.

நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக மாற்றுமாறு இந்திய அரசிடம் கோரினேன்.

இதனால் மக்கள் தேவைப்படும் போது அரிசி, மளிகை பொருட்களை நேரடியாக வாங்க முடியும். இருப்பினும் இந்திய அரசானது ஏழை மக்களுக்கு அரிசி உள்ளிட்டவற்றை நேரிடையாக விநியோகிக்க கோரியது. அதையடுத்து நிர்வாகமானது வெளிப்படையான முறையில் விநியோகிக்கவும், சமூக தொலைவை பராமரிப்பது தொடங்கி குறைந்த பணியாளர்களை கொண்டு தர திட்டமிடுகிறது.

இதுதொடர்பான பணியில் தலைமை செயலாளர், குடிமை பொருள் வழங்கல் துறை செயலர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அதை புதுவை அரசு இறுதி செய்தவுடன் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு கிரண்பேடி பதிவில் கூறினார்.
Tags:    

Similar News