செய்திகள்
அன்பழகன் எம்எல்ஏ.

கொரோனா தடுப்பு பணி ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் ஊக்கத்தொகையாக வழங்க அன்பழகன் கோரிக்கை

Published On 2020-04-04 15:02 GMT   |   Update On 2020-04-04 15:02 GMT
புதுவையில் கொரோனா தடுப்பு பணி ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக அமைச்சர்கள் தலைமையில் அரசு அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய கமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உப்பளம் தொகுதியில் மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, கூட்டுறவு துறை துணை பதிவாளர் சாரங்கபாணி, ஆதிதிராவிடர் நலத்துறை துணை இயக்குனர் நாகலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் மக்களின் நலனுக்காக செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மற்றும் அடிப்படை தேவைகள், மருத்துவ உதவிகள் சம்பந்தமாக உப்பளம் தொகுதிக்குட்பட்ட உடையார் தோட்டம், ராசு உடையார் தோட்டம் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் அன்பழகன் எம்.எல்.ஏ. வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கினார்.

இதையடுத்து அவர் கூறுகையில் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, வருவாய்துறை, உள்ளிட்ட கொரோனா சேவை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 3 மாத கால சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News