செய்திகள்
திருப்போரூர் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம்- 6 பேர் மட்டுமே அனுமதி
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் இன்று காலை திருப்போரூர் முருகன் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம் செய்தனர். அவர்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருப்போரூர்:
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் இன்று காலை திருப்போரூர் முருகன் கோவிலில் 2 ஜோடிகள் திருமணம் செய்தனர். அவர்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் விழுப்புரத்தை சேர்ந்த கதிரவன்- நெடுங்குன்றத்தை சேர்ந்த காத்திகா மற்றும் திருவான்மியூரை சேர்ந்த ஆகாஷ்-ஈஞ்சம்பாக்கம் ஜெனனி பிரியா ஆகிய இரண்டு ஜோடிகள் திருமணம் நடந்தது.
திருமண ஜோடியை தவிர ஒரு ஜோடிக்கு தலா 6 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த திருமணத்தை போலீசாரும், சுகாதார அதிகாரிகளும் கண்காணித்தனர்.
நாளை மறுநாள் இந்த கோவிலில் 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்ய முன் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.