செய்திகள்
பாலாற்றங்கரை பகுதியில் வாலிபர் பிணம்
பாலாற்றங்கரை பகுதியில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்தவாயலூர் பாலாற்றங்கரை பகுதியில் நேற்று மாலை 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இறந்தவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? யாரேனும் கொலை செய்து பிணத்தை பாலாற்றில் கொன்டுவந்து வீசினரா? என்ற கோணத்தில் சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.