செய்திகள்
தற்கொலை

மதுராந்தகம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-03-02 12:29 IST   |   Update On 2020-03-02 12:29:00 IST
மதுராந்தகம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

மதுராந்தகம் அடுத்த தேவாதூர் கிராமம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் சேகர் வீட்டில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு விஜயா என்ற மனைவியும் சாமிளா, சீலா என்ற மகள்களும், மணிபாரதி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News