செய்திகள்
சாலை விபத்து

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2020-02-29 18:13 GMT   |   Update On 2020-02-29 18:13 GMT
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி(வயது 45). இவர்களது மகன் கவியரசன். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். கொள்ளுக்காரன்குட்டையில் தனியார் பள்ளி அருகில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கியபோது ஆதிலட்சுமி தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாயமடைந்த ஆதிலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து கணவரும், அவரது மகனும் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News