செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

பெருந்துறை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2020-02-28 10:27 GMT   |   Update On 2020-02-28 10:27 GMT
பெருந்துறை பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

பெருந்துறை கோட்டத்திற்கு உட்பட்ட ஈங்கூர் துணை மின் நிலையத்தில் நாளை (29-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலகரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர், வேலாயுதம்பாளையம், 1010 காலனி, பெருந்துறை ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News