செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-02-28 10:09 GMT   |   Update On 2020-02-28 10:09 GMT
ஈரோட்டில் தலைவலிக்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாத விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு:

ஈரோடு, சூரம்பட்டி வலசு, எம் எஸ் கே நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28).

இந்நிலையில் புவனேஸ்வரிக்கு கடந்த சில நாட்களாக தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து கொண்டாராம். எனினும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த புவனேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்குப்போட்டு கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News