செய்திகள்
ஆதார் அட்டையில் உள்ளவாறு இணையதளத்தில் பெயரை மாற்ற அறிவுரை
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு இணையதளத்தில் பெயரை மாற்றம் செய்து பயனடையலாம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித்தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகள் 4-ம் தவணை பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு இணையதளத்தில் தங்களது பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, 4-ம் தவணை பெறாத விவசாயிகள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி ஆதார் அட்டையில் உள்ளவாறு தங்களது பெயரை மாற்றம் செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.