செய்திகள்
தீக்குளித்து பெண் தற்கொலை

ஒரத்தநாடு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2020-02-10 12:06 GMT   |   Update On 2020-02-10 12:06 GMT
ஒரத்தநாடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் இவரது மனைவி இந்துமதி (வயது 38)

இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி உடல் கருகி காயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் ஒரத்தநாடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களும் சேர்ந்து தீயில் எரிந்து கொண்டிருந்த இந்துமதியை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் இந்துமதி கருகி பலியாகி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் இந்துமதியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயில் கருகி பலியான இந்துமதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News