செய்திகள்
வாலிபர் தற்கொலை

ராதாபுரம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2020-02-10 09:36 GMT   |   Update On 2020-02-10 09:36 GMT
ராதாபுரம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடங்குளம்:

ராதாபுரம் அருகே உள்ள பெத்தரெங்கபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சுபேந்திரன் (24), கூலித்தொழிலாளி. இவரது தாயாருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு பகுதியில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை என தெரிகிறது. இதனால் சுபேந்திரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சுபேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News