செய்திகள்
கொள்ளை

காட்பாடியில் ஷோரூமில் ரூ.2 லட்சம், 7 பவுன் நகை கொள்ளை

Published On 2020-02-09 09:28 GMT   |   Update On 2020-02-09 09:28 GMT
காட்பாடியில் 2 ஷோரூம்கள் உடைத்து பணம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடி:

காட்பாடி சித்தூர் சாலையில் சத்யா வீட்டு உபயோக பொருட்கள் ஷோரூம் உள்ளது. நேற்று இரவு அதன் 3-வது மாடிக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த கதவின் தகட்டை நீக்கி உள்ளே நுழைந்து பின்னர் ‌ஷட்டர் லாக்கை கடப்பாரையால் நீக்கியுள்ளனர்.

ஷோரூமுக்குள் இறங்கி ஷோரூம் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம், விலை உயர்ந்த 6 செல்போன்கள் மற்றும் ஊழியர் ஒருவர் வைத்திருந்த  7½ பவுன் நகை ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.

இதேபோல் அருகில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமுக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3500 எடுத்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ஷோரூம் நிர்வாகி விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு காட்பாடி டி.எஸ்.பி. துரைப்பாண்டி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

ஷோரூமில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News