செய்திகள்
விபத்து

செந்துறை அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2020-02-05 11:49 GMT   |   Update On 2020-02-05 11:49 GMT
அரிலூர் மாவட்டம் செந்துறை அருகே பஸ் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செந்துறை:

அரிலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவர் குழுமூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் குழுமூர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக வந்த பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News