செய்திகள்
கோப்பு படம்

கோத்தகிரி அருகே தீ மூட்டி குளிர் காய்ந்த தம்பதி மூச்சு திணறி பலி

Published On 2019-11-18 10:46 GMT   |   Update On 2019-11-18 10:46 GMT
கோத்தகிரி அருகே தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் தீ மூட்டி குளிர் காய்ந்த தம்பதியினர் மூச்சு திணறி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி:

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதி விசில்வாடியை சேர்ந்தவர் மாரிசாமிஷெட்டி. இவரது மகன் பிரதாப்(வயது24). இவரது மனைவி நாகம்மாள்(32).

இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி பகுதியில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அந்த நிறுவனம் சார்பில் அந்த பகுதியில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் இரவு பிரதாப்பும், நாகம்மாளும் தொழிற்சாலை வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அங்கு வசித்து வரும் மக்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிரதாப், நாகம்மாள் சம்பவத்தன்று தீ முட்டி குளிர் காய்ந்துள்ளனர். அப்போது மூச்சுதிணறி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்கள் எப்படி இறந்தனர் என்பது தெளிவாக தெரியவரும்.

தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் தம்பதியினர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News