ஊட்டியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
ஊட்டி:
பந்தலூர் அருகே கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தலைமை போலீசார் சந்திரன், மோகன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொளப்பள்ளி குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (60), சண்முகம் (55) ஆகிய இருவரும் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
நெல்லியாளம் பகுதியில், கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கொடிவேல் (42) என்பவரின் மளிகை கடையில், போதைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்