செய்திகள்
தீக்குளித்து தற்கொலை (கோப்புப்படம்)

கூடலூரில் அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-11-11 10:48 GMT   |   Update On 2019-11-11 10:48 GMT
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடும்ப தகராறு காரணமாக அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கவிதாசன் (வயது 41). இவர் கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கவிதாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டிற்கு வந்த கவிதாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News