செய்திகள்
ஈரோடு சூரம்பட்டியில் குளியலறையில் தவறி விழுந்தவர் பலி
ஈரோடு சூரம்பட்டியில் குளியலறையில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி காமராஜர் முதல் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (47). தொழிலாளி. இவர் வீட்டிற்கு வெளியே உள்ள பாத்ரூமிற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சுரேஷ் வெளியே வராததால், அவரது மனைவி சுமதி(45) அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, சுரேஷ் வழுக்கி விழுந்து, தலையில் அடிபட்டு மயங்கி சுயநினைவின்றி கிடந்தார். இதையடுத்து சுரேஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.