செய்திகள்
சாலை மறியல்

டி.என்.பாளையம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2019-11-02 10:22 GMT   |   Update On 2019-11-02 10:22 GMT
டி.என்.பாளையம் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் பகுதியில் பேரூராட்சி குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் கூறினர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர்- கள்ளியங்காடு பகுதியில் பேரூராட்சி குப்பைகளை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரச்சீர் கேடு ஏற்படுகிறது. இதனால் கொசு உற்பத்தி பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறி அந்த பகுதியை 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வணிப்புத்தூர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News