செய்திகள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:
தமிழக சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் நவீன் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தமிழக சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் நவீன் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.