பவானிசாகரில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கோம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் அபிபுல்லா (வயது 54). பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ் பெக்டராக பணி புரிந்து வந்தார். நேற்று மாலை பவானி சாகர் பூங்கா அருகே போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரை வாகனம் மூலம் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் அபிபுல்லாவுக்கு மனைவி, ஷமீம், (50), முஸ்தபா, என்ற மகன், ஜெசியா என்ற மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் முஸ்தபா, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.