செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2019-10-28 12:28 GMT   |   Update On 2019-10-28 12:28 GMT
ஈரோட்டில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி மோகன் குமாரமங்கலம் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி வடிவு (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வடிவு சூரம்பட்டி நால்ரோட்டில் டீ கடை வைத்து நடத்தி வந்தார்.

கணவர் இறந்தலில் இருந்து வடிவு கணவர் நினைவாகவே இருந்து வந்துள்ளார். மேலும் தற்போது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டிலிருந்த வடிவு தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்கி போட்டுகொண்டார் . அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News