செய்திகள்
சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடந்த போது எடுத்த படம்.

சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை

Published On 2019-10-15 23:27 IST   |   Update On 2019-10-15 23:27:00 IST
எஸ்.புதூரில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.புதூர்:

எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டி, பிரான்பட்டி, கணபதிபட்டி, நாகமங்கலம் பகுதிகளில் காந்தி பிறந்த தின விழாவையொட்டி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை பா.ஜனதா ஒன்றிய தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. காந்தியின் பிறந்த நாளை வருகிற 30-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

அதன்படி நாடு முழுவதும் காந்தியின் பிறந்த நாளை அரசின் சார்பிலும் பல்வேறு அரசியில் கட்சியினரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து சமூக விழிப்புணர்வு பாதயாத்திரையை புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புழுதிபட்டி வில்லி விநாயகர் கோவில் பகுதியில் தொடங்கிய பாதயாத்திரை முக்கிய வீதிகள் வழியாக வந்து பிரான்பட்டி சாலை இணைப்பில் முடிவடைந்தது. இதில் தூய்மையை பேணுவோம், மரங்களை நடுவோம், நீர் ஆதாரம் காப்போம், பெண்கள் நலம் காப்போம், இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவோம், கதர் ஆடை அணிவோம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மதுவை ஒழிப்போம், சமூக ஒற்றுமையை வளர்த்திடுவோம், சுதேசி பொருட்களை ஆதரிப்போம் போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.

இதில் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள், பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நாகராஜன், மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னையா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

Similar News