செய்திகள்
தற்கொலை

திருப்பத்தூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

Published On 2019-09-16 16:02 IST   |   Update On 2019-09-16 16:02:00 IST
திருப்பத்தூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் அருகே உள்ள மல்லாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 25). இவர் வெல்டிங் தொழிலாளி.

இவருக்கும் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி கிராமத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புதுமண தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த வரலட்சுமி அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கிணற்றில் குதித்து மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி வரலட்சுமியை பிணமாக மீட்டனர்.

குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News