செய்திகள்
40 வயதாகியும் திருமணம் ஆகவில்லை- விரக்தியில் தற்கொலை செய்த நபர்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே 40 வயதாகியும் திருமணம் ஆகாததால் விரக்தியடைந்த நபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொடுமுடி:
கொடுமுடி அருகில் கொளாநல்லிகிராமம் பெரிய செம்மான்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 40) இவருக்கு பலமுறை திருமண ஏற்பாடு செய்தும் திருமண தடை ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த பத்மநாபன் கடந்த மாதம் 25-ந் தேதி மதியம் 11.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை எடுத்து குடித்து விட்டார்.
பின்னர் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்த அவரை அவரது சகோதரி மீனாட்சி பார்த்து விசாரித்த போது விஷ மருந்தினை குடித்துவிட்டதை அறிந்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பத்மநாபன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.