செய்திகள்
விபத்து

நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் விபத்தில் பலி

Published On 2019-09-16 15:38 IST   |   Update On 2019-09-16 15:38:00 IST
நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நம்பியூர்:

நம்பியூர் பள்ளிகூடம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (வயது 28) டெய்லராக பணிபுரிந்து வந்தார். காதல் திருமணம் செய்தவர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று மாலை 5 மணியளவில் பிரகாஷ் குமார் மோட்டார் சைக்கிளில் நம்பியூர்-கோபி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

கே.மேட்டுப்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது உடல் மற்றும் கை-கால் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News