செய்திகள்
கோவில் உண்டியல் கொள்ளை

கோவில் உண்டியலை திருடிய தந்தை-மகன் கைது

Published On 2019-09-12 15:39 IST   |   Update On 2019-09-12 15:39:00 IST
புளியம்பட்டி அருகே கோவில் உண்டியலை திருடிய தந்தை, மகனை கைது செய்த போலீசார் உண்டியலை பறிமுதல் செய்ததோடு தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.

பு. புளியம்பட்டி:

புளியம்பட்டி அடுத்துள்ள கணக்கரசம்பாளையத்தில் இருந்து பருசாபாளையம் செல்லும் சாலையில் சடையப்பச்சி கோயில் உள்ளது. இக்கோவிலுக்குள் சம்பவத்தன்று 3 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் 3 பேரையும் துரத்தினர். அப்போது 2 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

பிடிபட்ட 2 பேரையும் புளியம்பட்டி போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள், புளியம்பட்டி சொலவனூர் அரசாணி மொக்கை பகுதியை சேர்ந்த முருகேசன்(50) மற்றும் இவரது மகன் ராஜன்(28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் உண்டியலை பறிமுதல் செய்ததோடு தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.

Similar News