செய்திகள்
தற்கொலை

விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

Published On 2019-08-31 18:20 GMT   |   Update On 2019-08-31 18:20 GMT
சிங்கம்புணரி அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் பார்த்திபன் (வயது 30). பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் கடந்த 5 ஆண்டு முன்பு மண்டபம் முகாமில் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு சென்றவர், இதுவரை கணவரை தொடர்பு கொள்ளவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த பார்த்திபன், தன் மனைவி குறித்து அக்கம்பக்கத்தினருடன் பேசியபடியே இருப்பாராம்.

விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News