செய்திகள்
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 2019 ஆகஸ்டு 1 முதல் 31 வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற ரீதியில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் டில்லியில் இருந்து குழுவினருடன் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட சிவபுரிப்பட்டியில் முத்துலெட்சுமி, எருமைப்பட்டியில் நல்லம்மாள், எஸ்.எஸ்.கோட்டையில் ராஜாத்தி மற்றும் அணைக்கரைப்பட்டியில் சாந்தி ஆகியோர் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், தபால் நிலையங்கள் மற்றும் கோவில்களில் உள்ள கழிப்பறை வசதிகளை பார்வையிட்டனர். மேலும் சுற்றுப்புற சுகாதாரம், கழிவுகளை அப்புறபடுத்துதல் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பழத்தோன், வட்டார ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 2019 ஆகஸ்டு 1 முதல் 31 வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற ரீதியில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் டில்லியில் இருந்து குழுவினருடன் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட சிவபுரிப்பட்டியில் முத்துலெட்சுமி, எருமைப்பட்டியில் நல்லம்மாள், எஸ்.எஸ்.கோட்டையில் ராஜாத்தி மற்றும் அணைக்கரைப்பட்டியில் சாந்தி ஆகியோர் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், தபால் நிலையங்கள் மற்றும் கோவில்களில் உள்ள கழிப்பறை வசதிகளை பார்வையிட்டனர். மேலும் சுற்றுப்புற சுகாதாரம், கழிவுகளை அப்புறபடுத்துதல் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பழத்தோன், வட்டார ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.