செய்திகள்
தற்கொலை

காரைக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2019-08-24 06:55 GMT   |   Update On 2019-08-24 06:55 GMT
காரைக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி:

காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆசிகாபர்வீன் (வயது 20). இருவரும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஆனந்துக்கு பிறந்தநாள்.

எனவே சாமியார் தோட்டத்தில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கணவனும், மனைவியும் சென்றனர். அப்போது ஆனந்த் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆசிகாபர்வீன் அவரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனவேதனை அடைந்த ஆசிகாபர்வீன் ஆலங்குடியார் வீதியில் உள்ள வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆசிகாபர்வீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

ஆசிகாபர்வீனுக்கு திருமணமாகி 1 மாதமே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News