செய்திகள்
ஈரோடு அருகே ரெயில் மோதி வாலிபர் உயிரிழப்பு
ஈரோடு அருகே ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு காவேரி ரெயில் நிலையத்திற்கும், ஆனங்கூர் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த காசி காடு, சாந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது20) என தெரியவந்தது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கார்த்திகேயன் அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தை ரெயில் வருவதை கவனிக்காமல் கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கார்த்திகேயன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு காவேரி ரெயில் நிலையத்திற்கும், ஆனங்கூர் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த காசி காடு, சாந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது20) என தெரியவந்தது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கார்த்திகேயன் அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தை ரெயில் வருவதை கவனிக்காமல் கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கார்த்திகேயன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.