செய்திகள்
தண்டவாளம்

தண்டவாளத்தை கடந்தவர் ரெயில் மோதி பலி- யார் அவர்? போலீசார் விசாரணை

Published On 2019-07-24 16:06 IST   |   Update On 2019-07-24 16:06:00 IST
ஈரோடு அருகே தண்டவாளத்தை கடந்தவர் ரெயில் மோதி பலியானார். அவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு அடுத்த மாவிலிபாளையம் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ரெயில் மோதி இறந்தவர் நீலம் கலர் லுங்கி அணிந்திருந்தார்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News