செய்திகள்
மழை

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

Published On 2019-07-24 05:13 GMT   |   Update On 2019-07-24 05:13 GMT
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதைப் போல் நேற்றும் மழை பெய்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதைப் போல் நேற்றும் மழை பெய்தது.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இதைப்போல் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் நல்ல மழை கொட்டியது.

கொடிவேரி அணை பகுதியில் 19. 2 மி.மீ மழையும், கோபியில் 19 மி.மீ மழையும் பெய்தது.

இதைப்போல் பவானி, கவுந்தப்பாடி, நம்பியூர் பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எலந்த குட்டை மேட்டில் 10.2 மி.மீ , கவுந்தப்பாடியில் 7 மி.மீ, பவானியில் 6.4 மி.மீ, நம்பியூரில் 3 மி.மீ, தாளவாடியில் 2 மி.மீ மழையும் பெய்தது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2383 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 60.79 அடியாக உள்ளது.

Tags:    

Similar News