செய்திகள்
ஆபத்தான பாலத்தின் வழியே தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது

மொடக்குறிச்சி அருகே ஆபத்தான பாலத்தை விரிவுபடுத்துங்கள் - பொதுமக்கள் வேண்டுகோள்

Published On 2019-07-23 11:50 GMT   |   Update On 2019-07-23 11:50 GMT
மொடக்குறிச்சி அடுத்த கோவில்பாளையம் செல்லும் வழியில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையத்திலிருந்து ராக்கியா பாளையம் செல்லும் சாலையில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.

தற்போது, ராக்கியா பாளையத்திலிருந்து கோவில் பாளையம் பகவதியம்மன் கோவில் வரை தார்சாலை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை விரிவாக்கம் செய்து பணிகளை தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை விரிவுபடுத்தி பணிகளை தொடர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News