செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலையும் இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான திண்டல், வீரப்பன் சத்திரம், கருங்கல் பாளையம், கொல்லம் பாளையம், மூலப்பாளையம், ஆணைக்கல் பாளையம், லக்காபுரம், சோலார், முள்ளாம் பரப்பு ஆகிய பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது.
மழை பெய்த அளவு மி.மீட்டரில் வருமாறு:- கவுந்தப்பாடி -5.8, கோபி -4.2, பவானிசாகர் -3.4, குண்டேரிபள்ளம்-3.4, ஈரோடு -3.